என் அம்மாவைக் காப்பாற்றிய அன்னை

Published : 2016-03-19 04:20:00 | Author : சக்தி ஷி. சத்தியமூர்த்தி , மேட்டுக்கடை, முத்தூர்

ன்னையின் கடைக்கண் பார்வையில் வாழும் குடும்பங்களில் எங்களது குடும்பமும் ஒன்று. நான் ஆசிரியர் பயிற்சி முடித்து உள்ளேன். எம்.ஏ பட்டதாரியும் கூட. நான் கடந்த 5 ஆண்டு காலமாக சக்தி மாலை அணிந்து மேல்மருவத்தூருக்கு பக்தியுடன் வந்திருக்கிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன் எனது தாயாருக்கு தீராத வயிற்று வலி அடிக்கடி வந்து துன்புறுத்தியது. அவ்வமயம் நான் வேண்டாத தெய்வங்களே இல்லை.இருப்பினும் என் வேண்டுதலுக்குப் பலன் இல்லை.

இறுதியாக, மனம் உருகி அம்மாவிடம் சென்று முறையிட்டேன். அதிசயம் நிகழ்ந்தது. ஒரே மாதத்தில் என் அம்மாவின் வயிறு வலி தீர்ந்து விட்டது. இதற்கு முன்பு பல மருத்துவமனைகள் சென்றோம். சில மருத்துவர்கள் வயிற்றில் கட்டி இருக்கிறது. அது புற்றுநோயாகவும் இருக்கலாம் என்றெல்லாம் கூறி எங்களை வேதனைக்குள்ளாக்கினார்கள்.


எந்த மருத்துவர் சொன்னாலென்ன உன் அம்மாவை நான் காப்பாற்றித் தருகிறேன் என்று அம்மா நிரூபித்து விட்டார்கள் . அம்மாவின் சக்தி எங்களை ஆச்சர்யப்படுத்தியது. மருத்துவர்களுக்கெல்லாம் மருத்துவர் நம் மருவத்தூர் அம்மா என்பது எங்களுக்குப் புரிந்தது. அகிலமெங்கும் அம்மாவின் புகழ் ஓங்கிக் கொண்டிருக்கிறது


எந்த மருத்துவர் சொன்னாலென்ன உன் அம்மாவை நான் காப்பாற்றித் தருகிறேன் என்று அம்மா நிரூபித்து விட்டார்கள் . அம்மாவின் சக்தி எங்களை ஆச்சர்யப்படுத்தியது. மருத்துவர்களுக்கெல்லாம் மருத்துவர் நம் மருவத்தூர் அம்மா என்பது எங்களுக்குப் புரிந்தது. அகிலமெங்கும் அம்மாவின் புகழ் ஓங்கிக் கொண்டிருக்கிறது. அன்னை எனது அம்மாவை மட்டும் காப்பாற்றவில்லை. எங்கள்  குடும்பத்தையே காப்பாற்றி இருக்கிறார்கள் .