சக்தி ஒளி பற்றி அம்மா

Published : 2016-03-19 04:15:00 | Author : சக்தி

“நம் பக்தர்கள் , தொண்டர்கள்  ஒவ்வொருவர் கையிலும் ஒரு ‘சக்திஒளி’ புத்தகம் எப்போதும் இருக்க வேண்டும். நல்ல எண்ணத்தோடு செய்யும் ஒவ்வொரு நல்ல காரியமும் வெற்றியாக முடியும். அதை அனுபவத்தில் உணரலாம்.”

ஒரு தொண்டரிடம் ஆன்மிககுரு அருள் திரு அம்மா அருளியது

அம்மா என் கண்ணீரைத் துடைத்தாள் . ஒருமுறை அம்மா என் கனவில் வந்தார்கள் . நான் தியானத்தில் இருந்தேன். அப்போது அம்மா என்னை அழைத்து ஒரு சின்னத்தட்டிலே வேப்பிலையைக் கொடுத்து அதை என் வீட்டில் அனைவருக்கும் கொடுக்கச் சொன்னார்கள் . அதே போல் கொடுத்தேன்.

அன்றிலிருந்து எங்கள் வீட்டில் யாருக்கும் பெரிதாக எந்த நோயும் வருவதில்லை. தினமும் காலை 3 மணிக்கு எழுந்து 1008, 108 எல்லாம் படிப்பேன். பத்து வருடம் வார்த்தைகள் தெரிவதற்கு கண்ணாடி அணிந்துதான் படிப்பேன். ஆனால் இப்போதெல்லாம் கண்ணாடி இல்லாமலேயே எல்லாம் படிக்க முடிகிறது. இப்படி எத்தனையோ அற்புதங்கள் அம்மா என் வாழ்வில் நடத்தி இருக்கிறார்கள் .

நான் தினமும் அதிகாலை 3 மணிக்கு அம்மாவுக்கு குங்கும அர்ச்சனை செய்வேன் அப்படிச் செய்யும் போது அம்மாவின் படத்தின் மேலே வைத்திருக்கும் வேப்பிலை ஆடிக்கொண்டே இருக்கும். நான் அர்ச்சனை முடித்தவுடன் ஆடலும் நின்று விடும். இக்காட்சியைக் காணும் போது என் உடல் சிலிர்க்கும். என் மனம் பூரிப்படையும். கண்கள் குளமாகும். எங்கள் வீட்டருகில் உள் ள 4 சக்திகள் சேர்ந்து காலை 5 மணிக்கு எங்கள் சக்திபீடத்திற்குப் போவோம். அது எங்கள் வீட்டிலிருந்து 3 கிலோமீட்டர் தூரம் இருக்கிறது.

சில தவிர்க்க முடியாத காரணங்களால் சில சமயம் போக முடியாத சூழ்நிலை வரும்.


ஒருநாள் என் கனவில் நான் மட்டும் எங்கள் சக்திபீடக் கருவறையில் அம்மாவைத் துணியால் துடைத்துக் கொண்டிருக்கிறேன். மற்றவர்கள் எல்லாம் தொலைவில் அவர்கள் வேலையைச் செய்து கொண்டிருந்தார்கள் . அப்போது 8 மாதக் குழந்தையாக மாறி அம்மா என் கையில் தவழ்கிறது. அந்தக் காட்சியை நினைக்கும் போது இப்போதும் என் கண்கள் கலங்குகின்றன. இது போல பல அற்புதங்கள் அம்மா நிகழ்த்தியிருக்கிறார்கள் . அம்மாவை நம்பினவர்களை ஒருபோதும் கைவிடுவதில்லை


ஒருநாள் என் கனவில் நான் மட்டும் எங்கள் சக்திபீடக் கருவறையில் அம்மாவைத் துணியால் துடைத்துக் கொண்டிருக்கிறேன். மற்றவர்கள் எல்லாம் தொலைவில் அவர்கள் வேலையைச் செய்து கொண்டிருந்தார்கள் . அப்போது 8 மாதக் குழந்தையாக மாறி அம்மா என் கையில் தவழ்கிறது. அந்தக் காட்சியை நினைக்கும் போது இப்போதும் என் கண்கள் கலங்குகின்றன. இது போல பல அற்புதங்கள் அம்மா நிகழ்த்தியிருக்கிறார்கள் . அம்மாவை நம்பினவர்களை ஒருபோதும் கைவிடுவதில்லை.

“ஒவ்வொரு வீட்டிலும் சக்திஒளி இருக்க வேண்டும். எந்தெந்த வீட்டில் சக்திஒளி இருக்கிறதோ அங்கு நான் இருக்கிறேன்". - அன்னையின் அருள் வாக்கு.