நல்ல மதிப்பெண்

Published : 2016-03-19 04:05:00 | Author : சக்தி றி. மாலதி , வாலாஜா,வேலூர் மாவட்டம்

நான் பி.எஸ்.ஸி. கணிதம் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி. என் தங்கை கலவை ஆதிபராசக்தி கல்லூரியில் படிக்கிறாள் . அவளுக்கு கடந்த ஓராண்டாகவே சக்திஒளி இல்லத்திற்கு வரும். நான் சில நாட்களாகவே சக்திஒளி படித்து வருகிறேன். 2013-14 வரை எனக்குப் படிப்பில் ராசியில்லை. நான் நன்றாகவே தேர்வு எழுதினாலும் மிகக் குறைவான விழுக்காட்டில்தான் மதிப்பெண்கள்  பெறுவேன். என்ன செய்யலாம் என்று என் மனம் தவித்தது. பின்பு இல்லத்திற்கு தேடி வரும் சக்திஒளி சுடரை ஒருநாள்  படித்தேன். அதில் உங்கள்  கடிதம் பகுதியும் நான் படித்துள்ளேன். அதனால் நானும் அம்மாவிடம் செமஸ்டர் 3ல் நல்ல மதிப்பெண் விழுக்காடு பெற வேண்டும் என்று நன்கு வேண்டிக் கொண்டேன். அதே போல் தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் நான் 72% விழுக்காடு பெற்றிருந்தேன். இந்த மதிப்பெண் எனக்குப் போதுமானது. மனம் மகிழ்ச்சியடைந்தேன். நன்றி கூற நான் சக்தி ஒளிக்கு எழுதிவிட்டேன்.