நிம்மதி கொடுத்த அம்மா

Published : 2016-03-19 04:00:00 | Author : சக்தி. உஷா பாலசுப்பிரமணி , தருமபுரி

ம்மாவின் கோடானு கோடி பக்தைகளில் நானும் ஒருத்தி. கடந்த 4 வருடங்களாக எனக்கும் என் கணவருக்கும் அடிக்கடி வாய்ச்சண்டை மனப்பிரச்சனைகள்  ஏற்பட்டு குடும்பத்தில் சற்றும் நிம்மதி இல்லாமல் வாழ்வா? சாவா? என்ற நிலைக்குச் சென்றுவிட்டேன். அந்த நிலையில் அம்மாவின் அருள் வாக்கு என்னை மனக்குழப்பத்திலிருந்து நீக்கி தெளிவை உண்டாக்கியது. அன்றிலிருந்து என்றுமே (உயிருள்ள வரை) அம்மாவே துணை என்று எண்ணி, அம்மா என் மனக்கவலையை நீக்கி நிம்மதி தாருங்கள்  அம்மா என்று என் கவலையை அம்மாவிடம் சொல்லி அழுதேன்.

என்னே ஆச்சர்யம்! அம்மாவின் அருளால் என் கணவர் முழுதாக மனம் மாறிவிட்டார். என்னை முழு மனதோடு ஏற்றுக் கொண்டு என்னிடமும், குழந்தைகளிடமும் அன்பாக இருக்கிறார். அம்மாவின் கருணைக்கு இந்த உலகில் ஈடு இணையே இல்லை. இன்றைக்கும், என்றைக்கும் அம்மாவின் அருள் இருந்தால்தான் மன நிம்மதியான வாழ்வு வாழ முடியும்


என்னே ஆச்சர்யம்! அம்மாவின் அருளால் என் கணவர் முழுதாக மனம் மாறிவிட்டார். என்னை முழு மனதோடு ஏற்றுக் கொண்டு என்னிடமும், குழந்தைகளிடமும் அன்பாக இருக்கிறார். அம்மாவின் கருணைக்கு இந்த உலகில் ஈடு இணையே இல்லை. இன்றைக்கும், என்றைக்கும் அம்மாவின் அருள்  இருந்தால்தான் மன நிம்மதியான வாழ்வு வாழ முடியும். மன நிம்மதி அளித்த அம்மாவின் பாதங்களுக்கு கோடானு கோடி நன்றிகள்