மானம் போகாமல் காப்பாற்றிய அம்மா

Published : 2016-03-19 03:50:00 | Author : சக்தி சி. பிரேமலதா , கோவை

28 ஆண்டுகளுக்கு முன் அம்மாவின் அருளாசியால் எங்களுக்கு கிடைத்த எங்கள்  மகன். அவனது வேலை இழக்கும் நிலை ஏற்பட்டது. அதுவும் மூன்று மாதங்களுக்கு முன் அவனது திருமண நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு. சென்ற ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி அம்மாவின் அருளால் அவனுக்கு திருமணம் இனிதே நடந்து முடிந்தது. அந்த நேரம் பார்த்து அவனுடைய வேலை போயிருந்தால் பெண்ணும், பெண் வீட்டாரும் எங்களைப் பற்றி எவ்வளவு கேவலமாக நினைத்து இருப்பார்கள் . உடனே மிகுந்த மன வருத்தத்துடன், என் மகனுக்கு நல்ல வேலை கிடைத்தால் காணிக்கை செலுத்துகிறோம் என்றும், சக்திஒளிக்கு எழுதுகிறோம் என்றும் அம்மாவிடம் மனதார வேண்டிக் கொண்டோம். அடுத்த ஒரே மாதத்தில் அம்மாவின் அருளால் அவனுக்கு அதைவிட நல்ல கம்பெனியில் அதிக சம்பளத்தில் வேலை கிடைத்தது. அம்மாவின் கருணையை என்னவென்பது