வேதனை நீக்கிய வேள்வி

Published : 2016-03-19 03:45:00 | Author : சக்தி. வி. கௌசல்யா , மதுரை

ன் அக்கா தன் கணவருடன் அமெரிக்காவில் வசித்து வருகிறாள் . நான்கு வருடங்களாக குழந்தை பாக்கியம் வேண்டி கஷ்டப்பட்டு வந்தார்கள் . அம்மாவிடம் பாதபூஜையில் கேட்கும்போதெல்லாம் ஆட்டுப்பால் அருந்தும்படி அறிவுறுத்துவார்கள் . முதலில் என் அக்காவின் கணவர் நம்பாமல் இருந்தார். பின் அருந்த ஆரம்பித்தார்.

பிறகு இந்தியாவில் இருந்து சென்ற பின்னரும், அங்கும் ஆட்டுப்பால் அருந்தும் படியே அம்மா கூறினார்கள் . அவர்களும் செய்து வந்தார்கள் . சமீபத்தில் அம்மா பாத பூஜையில், சித்திரைப் பௌர்ணமி வேள்வியில், இரட்டை நாக குண்ட வேள்வியில் கலந்து கொள்ளுமாறு கூறினார்கள் .

என்னே ஆச்சர்யம்! வேள் வி செய்த மறுநாள் , செய்து பார்த்த சோதனையில் அக்கா கர்ப்பம் தரித்திருப்பதாக தெரிய வந்தது. மேலும், இரத்த பரிசோதனை செய்வதற்காகக் காத்திருந்தனர். இதற்கிடையில் நான் முன்னரே வேண்டியபடி, சக்தி ஒளிக்கு எழுதி அனுப்பிவிட்டேன். பின்னர் நடந்த பரிசோதனையில் முடிவு வந்தது. அதிலும் என் அக்காவின் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டது. எங்கள் நீண்டநாள் வேதனைக்கு ஒரு முடிவு வந்தது. அம்மாவின் கருணையை என்னவென்று சொல்வது என்றே தெரியவில்லை. அம்மாவிற்குக் கோடானு கோடி நன்றிகள் .