அம்மா அருளால் வெளியேறிய சாவி

Published : 2016-03-01 06:00:00 | Author : சக்தி பா. சத்யநாதன் , சேலையூர், சென்னை-73.

ங்கள் குடும்பம் 16 வருடங்களாக அன்னையை வழிபட்டு வரும் குடும்பம். அன்னை எங்களுக்கு அருளிய அற்புதங்கள் ஏராளம். அவற்றுள் ஒன்றினை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். சமீபத்தில் சக்திமாலை அணிந்து மருவூர் கிளம்பிய நேரம். அப்போது என் அம்மா பணிபுரியும் பள்ளித் தலைமையாசிரியர், எங்கள் வீட்டிற்கு வந்தார். என் வீட்டின் அருகில் 2 வயது குழந்தை ஒன்று குளிர்பதன பெட்டியின் சாவியை விழுங்கி விட்டது. 5 நாட்கள் ஆகியும் வெளியேறவில்லை. இக்காணிக்கையைப் பெற்று மருவூரில் செலுத்தி இக்குழந்தைக்காக வேண்டிக் கொள்ளுங்கள் என்றார். நானும் காணிக்கையை பெற்றுக் கொண்டு அன்னையை வேண்டி கலச தீர்த்தமும், குங்குமமும் கொடுத்து அம்மா என் வேண்டுதல் நிறைவேற்றினால் சக்தி ஒளிக்கு எழுதுவதாகவும் வேண்டிக் கொண்டேன். நாங்கள் இருமுடி செலுத்திவிட்டு இல்லம் திரும்பிய மறுநாள் காலை உணவு உண்டு கொண்டிருந்தோம். அப்போது வந்த அலைபேசி அழைப்பில் சாவி வெளி வந்துவிட்டது எனத் தகவல். என் வேண்டுதல் நிறைவேறிவிட்டது. வேண்டியபடி சக்திஒளிக்கு எழுதிவிட்டேன்.